சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம்
சென்ற ஆண்டு செப்டம்பரில் தமிழ் வலைப்பதிவுகளின் நிலை பற்றியும், அறிவியலாளர், சமூகத்தோடு தொடர்புகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர், தமிழில் கவிதைகள் எழுதுபவர் என்ற வகையில், அவரையும் வலைப்பதிக்க அழைத்து ஒரு மடல் எழுதினேன். இன்றுவரை மடல் கிடைத்ததத்ற்கான ஒப்புகையோ, அவரின் பதிலோ கிடைக்கவில்லை. மடலில் கொஞ்சம் பெருமையடிப்பும் தமிழ்மணம் தளத்துக்கு விளம்பரவாசமும் தெரியலாம், ஆனாலும் உதவியாளரை விட்டுப் பதில் எழுதச்சொல்லக்கூட முடியாமல் போகும் அளவுக்கு இது ஒதுக்கத்தக்கதா என்று தெரியவில்லை. பிறந்தநாள் காணும் அப்துல் கலாம் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல நண்பர்கள் அவரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருப்பது கண்டு இதை பொதுவில் சொல்லத்தோன்றியது. அவ்வளவுதான். (ஒரு நினைவூட்டு மடலும் அனுப்பினேன், அத்ற்கும் பதில் இல்லை. நான் அனுப்பிய முகவரி: presidentofindia@rb.nic.in
எழுதிய மடலை இங்கே கொடுக்கிறேன்
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
Nambi சொன்னது:"பாரம்பரியம் மிக்க இந்திய நாளிதழ் தி ஹிந்துவின்"
What nonsense is this?
I have nothing to comment about the content.
Nambi
வெள்ளி, 14.10.05, 23:48:04 dharumi சொன்னது:காசி,
"You are lucky to have a real 'online President'" என்று ஒரு அமெரிக்காகாரர் சொன்னதாக பத்திரிகை ஒன்றில் படித்ததாக நினைவு.
நானும் சில மாதங்களுக்கு முன்பு <a href ="http://dharumi.weblogs.us/2005/05/04/12...">ஒரு மெயில் அனுப்பினேன்</a>. No acknowledgement so far! ஒரு automated பதிலாவது அனுப்ப முடியுமே, எல்லா மெயில்களுக்குமே!
அதேபோல், என் மெயிலின் கருத்துக்கள் உடன்பாடாயிருந்தால் அந்த மெயிலையோ, அல்லது அதே பொருளிலோ மெயில்கள் அனுப்பும்படி நம் தமிழ்மண பதிவர்களைக் கேட்டிருந்தேன். சாரா என்பவர் அதே மெயிலை அனுப்பியிருந்தார். அவ்வளவே.
ஆயிரம் இருந்தாலும் இன்று நம் நாட்டு public figures-ல் நான் மிகவும் மதிக்கும் பெருந்தகை அவரே.
ref: http://dharumi.weblogs.us/2005/05/04/12...
சனி, 15.10.05, 01:07:09 Kasi சொன்னது:நம்பி,
அரசியல் தவிர்த்த தி ஹிந்து தலையங்கங்கள் இன்றும் என் மரியாதைக்குரியனவையே. நூற்றாண்டு தாண்டிய ஹிந்துவை 'பாரம்பரியம் மிக்க' என்று குறிப்பிட்டதில் என்ன 'நான்சென்'சைக் கண்டீர்கள் என்று விளக்குவீரா?
தருமி,
அப்பாடா, நான் தனியனில்லை என்ற மகிழ்ச்சி! நன்றி. உங்கள் கருத்தை மதிக்கிறேன்.
சனி, 15.10.05, 01:20:57 அரவிந்தன் நீலகண்டன சொன்னது:அன்புள்ள காசி,
பார்த்தேன். எனது அனுபவத்தை கூற விரும்புகிறேன். ஒரு முறை குடியரசுத்தலைவர் இணையதளத்தில் சந்திராயன் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கும் தெரியும்படியாக ஒரு அறிவியல் வெகுஜனத்தொடர்பினை இஸ்ரோ கொடுக்கவேண்டும் என அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். சரியாக ஒரு மாதத்திற்குள் எனது வீட்டு முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. இஸ்ரோ சந்திராயன் தொடர்பாக பொதுமக்கள் அறிவதற்காகவும் மாணவர்கள் அறிவதற்காகவும் வெளியிட்டுள்ள அனைத்து பிரசுரங்களையும் அனுப்புமாறு குடியரசுத்தலைவர் அலுவலகத்திலிருந்து பெற்ற தகவலின்படி அவை எனக்கு அனுப்பப்படுவதாக ஒரு மூத்த இஸ்ரோ அதிகாரியின் கடிதத்துடன். அவற்றினை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு ஏற்பட்ட இனிமைக் குறைவான அனுபவம் ஏதாவது பிழையாக இருக்கலாம். குடியரசுத்தலைவரின் இணைய பக்கங்களிலிருந்தே அனுப்பி பாருங்கள். அங்கு நாம் அனுப்புவது நம்மைக்குறித்த அதிக தகவல்களுடன் செல்வதால் நமது குடியரசுத்தலைவர் நம்பகத்தன்மையுடன் எதிர்வினையாற்ற முடிவதாக இருக்கும் என நினைக்கிறேன்.
சனி, 15.10.05, 11:30:05 Padma Arvind சொன்னது:காசி
முக்கிய தலைவர்களுக்கு பத்திரிக்கை தொடர்பு அதிகாரி போலவே மக்கள் தொடர்பு அதிகாரியும் அவரின் கீழ் பணியாற்றும் பல அதிகாரிகளும் இருப்பார்கள். இவர்களில் யாரேனும் முக்கியம் இல்லை என்று ஒத்தி வைத்திருக்கலாம்.
இங்கேயும்( அமெரிக்காவில்) குடியரசு தலைவருக்கு மக்கள் தொடர்பு கொண்டால் அவரின் அலுவகத்திலிருந்து உடனே பதில் எழுதுபவர்கள் இவர்கள் தான்.
நான் குடியரசுத் தலைவருக்கு எழுதிய மின்னஞ்சல்களுக்கும் பதில்கள் வந்ததில்லை. மஹாராஷ்டிரா சட்டம் ஒன்றுக்கு அவர் இன்னமும் கையெழுத்திடவில்லை, ஏன் என்று கேட்டு எழுதியிருந்தேன். பின் இரண்டு முறைகள் சில சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி கேட்டிருந்தேன்.
அவரது இணையத்தளம் மீது நம்பிக்கை போய்விட்டபடியால் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
ஆனால் அவர் தான் கொடுக்கும் அத்தனை பேச்சுக்களையும் ஆவணப்படுத்தி வைத்திருப்பது உபயோகமானது. அவரது தளத்தைத் தொடர்ச்சியாகப் படிக்கிறேன்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் இதுவரை எழுதியுள்ள அஞ்சல்கள் பதில் எதையும் எனக்குப் பெற்றுத்தந்ததில்லை.
திங்கள், 17.10.05, 01:28:08 அன்பு சொன்னது:அன்பு காசி,
இந்தப்பதிவை (ஏனோ) இன்றுதான் வாசித்தேன். அதிபரின் கவனத்துக்கு வலைப்பதிவை எடுத்துச்செல்லும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஏனோ பத்மா கூறுவதுபோல்தான் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதிபர் நேரிடையாக மின்னஞ்சலை வாசித்து, பதில் எழுதுகிறாரா என்று சரியாகத்தெரியவில்லை. ஆனால், பலருக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு அதிபர் தானே கைப்பட எழுதியனுப்பியிருப்பதை பத்திரிக்கை வாயிலாக படித்தே வருகிறேன். வேண்டுமென்றால் பிரதியெடுத்து தபாலிலும் அனுப்பிப்பார்க்கலாம்.பத்ரி எழுதியிருக்கும் விடயங்கள் பெரிய இடத்து மேட்டர்
அதனால் பதில் அனுப்பாமல் இருந்திருந்திருக்கலாம். உங்களுடைய மின்னஞ்சல் கிடைத்திருந்தால், குறைந்தபட்சம் வாழ்த்துக்கடிதம் வந்திருக்கும்.
மற்றப்படி நேற்று ஒரு செய்தித்தாளில் GoogleEarthக்கு அவருடைய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாகப்படித்தேன்.
மற்றப்படி என்னுடைய அனுபவத்தில், இங்கு ஒரு அமைச்சரை மின்னஞ்சல் மூலமே தொடர்புகொண்டு வேண்டிய உதவியை மின்னஞ்சல் மூலமே ஏற்பாடு செய்து கொடுத்தார். இப்போதும் மின்னஞ்சல் அனுப்பினால் ஒரு மணி நேரத்துக்குள் பதில் கிடைக்கும்.
ஆனால், முன்னர் ஒருமுறை இந்தியசுகாதார அமைச்சருக்கு (திரு. அன்புமணி அவர்களுக்கு அல்ல...) மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன், பதிலேதும் இல்லை. அதனால் பெரும்பாலும் உதவியாளார்கள் இருப்பதால், அவர்களைச் சென்றடைவதில்லை என்பதே, என் கணிப்பு.
திங்கள், 17.10.05, 02:59:17 nambi_ca சொன்னது:Kasi,
It is not necessarily to be great anything over 100 years old. Hope you agree with this.
I would really like to know how The Hindu reflected Tamilians views/interest as a mainstream news paper. We all know its stand on Ezham issue and how it chickened out when fellow editor was tortured as a terrorist.
May I know its role during defining moments of TamilNadu history over the past 100 years? To name a few:
- Stand on Justice party
- View on Rajagopalan’s cast based Education system
- E.Ve.Ramasamy’s self respect movement
- Hindi agitation
So I am not completely convinced about that adjective “parambariyam mikka’ The Hindu. May be it is appropriate to add another adjective to ‘parambaraiyam’, and then I have no issues at all.
Excuse me for drifting away from you main discussion.
*cheers*
Nambi
அ. நீலகண்டன், உங்கள் அனுபவம் மகிழ்ச்சியளித்தது, ஆச்சரியப்படுத்தவில்லை. அவரைப்பற்றிய நம் எதிர்பார்ப்புகளுக்கேற்பவே இருந்தது. என் அனுபவமும் இங்கே பகிரப்பட்டுள்ள தருமி, பத்ரி போன்றோர் அனுபவமும் அப்படி இல்லை. உங்கள் ஆலோசனைக்கு நன்றி. ஆனால் இது அவ்வளவு துரத்திப் போய் அவரிடம் சொல்லியே ஆகவேண்டிய விதயம் இல்லை. எனவே அனுப்ப உத்தேசமில்லை. அடுத்தமுறை எதாவது அவருடன் தொடர்புகொள்ளவேண்டியிருந்தால் செய்கிறேன்.
பத்மா,
அவராலேயே எல்லா மடல்களையும் படிக்கமுடியும் என்று சத்தியமாக நான் நினைக்கவில்லை. 100 கோடி மக்களின் பிரதிநிதிக்கு இது சாத்தியமில்லை. ஆனாலும் ஒரு மின்னஞ்சல் முகவரி என்று பொதுவில் வைத்தபின், எவரை எங்கு நியமித்தால், என்ன அறிவுரைத்தால், வரும் மின்னஞ்சல்களைக் கையாள முடியுமோ, அதைச் செய்யவேண்டிய கடமை அவருக்கோ அல்லது அவரின் அலுவலகத்தை நிர்வகிப்பவருக்கோ வந்துவிடுகிறது. அதன்பேரில் வரும் விமர்சனத்துக்கும் அவர் ஆளாகிறார். அதில் எந்த விலக்கும் அளிக்கும் சாத்தியம் இல்லை. உங்கள் தகவலுக்கு நன்றி.
பத்ரி, அன்பு,
அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டத்ற்கு நன்றி.
நம்பி,
'உண்மை', 'என் கருத்து', 'பொதுவாக நடப்பிலிருக்கும் கருத்து', இவை மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இவற்றில் எந்த இடத்தில் எதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அதைப் பயன்படுத்துவதே சரியான அணுகுமுறையாக எனக்குப் படுகிறது. நன்றி.
மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
23:01:26 - வெள்ளி, 14.10.05 -


